நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விஜய் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு அக்டோபர் 19ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை தியேட்டர்களில் தினமும் 5 காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சிலர் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலைப் பரப்பினர். நேற்று பேசிய தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணிக்கு காட்சிகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 20ம் தேதி காலை 9 மணி காட்சியிலிருந்து மட்டுமே பல தியேட்டர்கள் முன்பதிவுகளை ஆரம்பித்தன. படம் வெளியாகும் நாளுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் புதிய அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து தியேட்டர்களும் ஒரு சிறப்புக் காட்சியை நடத்தலாம். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் நள்ளிரவில் 1.30 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும்,” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் காலை 8 மணி காட்சிகளை நடத்த முடியாது.
கடந்த முறை வெளியிட்ட அரசு ஆணையில் விஜய்யை 'தளபதி விஜய்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய ஆணையில் வெறும் 'லியோ' படம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.