'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு அக்டோபர் 19ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை தியேட்டர்களில் தினமும் 5 காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சிலர் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலைப் பரப்பினர். நேற்று பேசிய தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணிக்கு காட்சிகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 20ம் தேதி காலை 9 மணி காட்சியிலிருந்து மட்டுமே பல தியேட்டர்கள் முன்பதிவுகளை ஆரம்பித்தன. படம் வெளியாகும் நாளுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் புதிய அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து தியேட்டர்களும் ஒரு சிறப்புக் காட்சியை நடத்தலாம். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் நள்ளிரவில் 1.30 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும்,” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் காலை 8 மணி காட்சிகளை நடத்த முடியாது.
கடந்த முறை வெளியிட்ட அரசு ஆணையில் விஜய்யை 'தளபதி விஜய்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய ஆணையில் வெறும் 'லியோ' படம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.