புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
இஸ்ரேல் - பாலஸ்தீனிய போருக்கு உலகம் முழுக்க கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு சிலரும், இஸ்ரேலுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் போரில் அப்பாவி மக்கள் செத்து மடிவது குறித்து தனது கவலையை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : வன்முறையும், மரணமும் எதையும் கொண்டு வந்து தரப்போவதில்லை. அது நம்மிடையே உள்ள மனித நேயத்தைத்தான் அழிக்கும். மகாத்மா காந்தி வலிமையின் ஆயுதமாக அகிம்சையை போதித்தார். அகிம்சையும் உண்மையும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. நமது வார்த்தையிலும், எண்ணத்திலும், செயலிலும் எப்போதுமே அகிம்சையை கடைபிடிக்க முடியாதுதான். ஆனாலும் அகிம்சையை குறிக்கோளாக வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும்.
இந்த போர் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தில் உள்ள எனது நண்பர்களும் இதில் சிக்கி தவிப்பது இன்னும் வேதனையை அளிக்கிறது. இந்த போர் பிரச்னை விரைவாக முடிவுக்கு வரவேண்டும். என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.