பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை குவித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது நடிகர் விஜயை வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ளார். வருகின்ற அக்டோபர் 19ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு வருகிறார். இதில் ரஜினிகாந்த் 171வது படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது: "ரஜினி 171வது படம் நான் இதுவரை இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். எனக்கு இது ஒரு புதிய முயற்சி. இந்த கதையை 20 நிமிடம் ரஜினி சாரிடம் கூறினேன். சமீபத்தில் ரஜினி சார் உடன் இப்படம் குறித்து போனில் பேசும் போது 'தூள் கிளப்பிற்லாம் கண்ணா' என ரஜினி சார் கூறினார். இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த படத்திற்காக ஆபிஸ் பூஜை நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரலில் துவங்கும்" என தெரிவித்தார்.