புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த சில வருடங்களில் யூடியூப்பில் அவரது படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பாலிவுட்டிலும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது.
சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுனுக்கு சேர்ந்து கொண்டது. இந்த நிலையில் இன்னொரு சிறப்பம்சமாக அவரது மெழுகுசிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது. இந்த சிலையை செய்ய தேவைப்படும் அல்லு அர்ஜுனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் ஆகியவை சமீபத்தில் சிலை வடிவமைப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள அல்லு அர்ஜுன், "நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த மியூசியத்திற்கு வந்துள்ளேன். ஆனால் நானே இங்கே சிலையாக இடம் பெறப்போகிறேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை" என்று கூறியுள்ளார்.