கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பிரபல பின்னணி பாடகி சின்மயி பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகிகள் பலருக்கும் டப்பிங்கும் பேசி வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛மீ டூ' விவகாரம் மூலம் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக இவருக்கு தமிழில் டப்பிங் பேச மறைமுக தடை விதிக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது. இதனால் தெலுங்கில் மட்டுமே இவர் பணியாற்றும் சூழல் இருந்தது. இந்த நிலையில் அவர் மீது விதிக்கப்பட்ட மறைமுக தடையை உடைக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தான் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தில் திரிஷாவுக்காக சின்மயியை டப்பிங் பேச வைத்துள்ளார்.
இதுகுறித்த தகவலை தற்போது மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள சின்மயி, ‛‛திரிஷாவுக்காக தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் டப்பிங் பேசியுள்ளேன். இதுபோன்ற ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு மில்லியன் தடவை நன்றியுடையவளாக இருப்பேன்'' என்று கூறியுள்ளார். சின்மயியின் இந்த பதிவுக்கு தன் பங்கிற்கு திரிஷாவும் நன்றி தெரிவித்துள்ளார்.