பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி |
சச்சின், சுயம்வரம், அப்பு, பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மோகன் சர்மா. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 70 வயதான மோகன் சர்மா தி.நகரில் இருந்து சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியது. இது தொடர்பாக மோகன் சர்மா சேத்துபட்டு போலீசில் புகார் செய்துள்ளார். காயம் அடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோகன் சர்மா தனக்கு சொந்தமான வீடு ஒன்றை விற்பதற்காக சில தரகர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். இதில் ஒருவர் மூலம் வீட்டை விற்றிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த மற்ற தரகர்கள் கூலிப்படையை ஏவி மோகன் சர்மாவை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மோகன் சர்மா தாக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள கேமரா ஒன்றில் பதிவாகி உள்ளது. இதை வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.