இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி அரவிந்தன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இது குறித்த தகவல் சூர்யாவுக்கு வந்ததை அடுத்து சென்னை எண்ணூரில் அமைந்துள்ள தனது ரசிகர் அரவிந்தன் வீட்டுக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார். அதையடுத்து அரவிந்தனின் பெற்றோரிடமும் நீங்கள் என்ன உதவி கேட்டாலும், அது செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு திருப்பி உள்ளார் சூர்யா. தனது ரசிகருக்கு சூர்யா அஞ்சலி செலுத்திய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.