பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனை இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
திரையுலக கலைஞர்களுக்கு மிகப் பெரிய கனவு ஆஸ்கர். உலகளவில் சினிமாவில் உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருதுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் 2024ல் நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மயைாளத்தில் வெளியான 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது.
கேரளாவில் பெய்த பெரும் மழை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்தார். டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சினிவாசன், லால், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம் ரூ.200 கோடி வசூல் சாதனை புரிந்தது.
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் 2018 படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு தேர்வாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.