படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாறியுள்ளார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழ் பட இயக்குனர்கள் லிங்குசாமி, அட்லீ ஆகியோர் அல்லு அர்ஜுனிடம் கதை சொன்னார்கள். இவற்றில் லிங்குசாமி படத்திற்கு பூஜையெல்லாம் நடந்தது. பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனிடம் தற்போது அல்லு அர்ஜுன் புதிய படத்திற்கான கதை ஒன்றை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணியில் படம் அமைந்தால் கண்டிப்பாக தெலுங்கு சினிமாவிற்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.