படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
நடிகர் சிரஞ்சீவி நடித்து கடைசியாக வெளிவந்த ' போலா சங்கர்' திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து சிரஞ்சீவி 157வது படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேண்டஸி கதை களத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார்கள்.
இதற்கு முன் சிரஞ்சீவி படங்களில் சிறப்பு வேடங்களில் மட்டுமே நடித்துள்ள அனுஷ்கா முதன்முறையாக சிரஞ்சீவி உடன் முழுநீள படத்தில் நடிக்க போகிறார். முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இப்போது அனுஷ்கா தேர்வாகி உள்ளாராம்.