ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் |
'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தேதியில் படம் வெளியாகாது என்று செய்திகள் வெளியாகின. இதுவரையிலும் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது பற்றி தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
'சலார்' படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை அதிக விலைக்கு சொன்னதால் வினியோகஸ்தர்கள் பலரும வாங்கத் தயங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஓடிடி வெளியீட்டு உரிமை வியாபாரமும் முடிவடையாத காரணம், ஆகியவற்றாலும்தான் பட வெளியீடு தள்ளிப் போய் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, செப்டம்பர் 28ம் தேதிக்குப் பிறகு வேறு எந்த தேதியில் படத்தை வெளியிடுவது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறதாம். பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட சரியான தேதியை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். நவம்பர் மாதம் வெளியிடலாமா அல்லது 2024 பொங்கலுக்கு வெளியிடலாமா என வினியோகஸ்தர்களுடனும் ஆலோசித்து அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.