ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்ற நடிகராக உயர்ந்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். கடந்த எட்டு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 'பாகுபலி 2' படத்திலிருந்தே வெளியீட்டுத் தேதிகள் சில பல காரணங்களால் தள்ளிப் போய் வருகின்றன.
'பாகுபலி 2' படத்தை முதலில் 2016ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். பின் நவம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்து கடைசியாக 2017 ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட்டார்கள். அப்படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்த 'சாஹோ' படத்தை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டு பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிட்டார்கள்.
பிரபாஸ் நடித்து 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்த படம் 'ராதே ஷ்யாம்'. ஆனால், படத்தை மார்ச் மாதம் தான் வெளியிட்டார்கள். அதற்கடுத்து பிரபாஸ் நடித்து இந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியான படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தை முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு அதன் பின் வேறு சில தேதிகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு கடைசியாக வெளியானது.
இப்போது பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்தை செப்டம்பர் 28ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து படத்தைத் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நவம்பர் 24ம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது.