ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர் ஏ.எஸ்.ரவிக்குமார் என்பவர் தனது படத்தின் கதாநாயகியை பொது மேடையில் முத்தமிட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாலகிருஷ்ணா, கோபிசந்த், சாய் தரம் தேஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை இயக்கியவர் ஏ.எஸ் ரவிக்குமார். தற்போது அவரது இயக்கத்தில் திரிகபதாரா சாமி என்கிற படம் உருவாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடிக்க, கதாநாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கதாநாயகி மன்னரா சோப்ரா பேசி முடித்ததும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த இயக்குனர் ரவிக்குமார் கதாநாயகிக்கு எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் திடீர் அதிர்ச்சிக்கு மன்னரா சோப்ரா ஆளானாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சமாளித்தார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பொதுவெளியில், அதுவும் ஒரு நடிகையின் அனுமதியின்றி ஒரு இயக்குனர் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்வது வெட்கக்கேடானது என்று அவருக்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.