சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. 500 கோடி வசூலை தாண்டி தற்போதும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு கேரக்டர் ஆர்சிபி ( ராயல் சேலன்ஞ்சர் பெங்களூரு) என்ற ஜெர்சியை அணிந்து நடித்திருப்பார். அவர் பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறுவார்.
"இந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபர் எங்கள் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பெண்களுக்கு எதிராக பேசுவதால் எங்கள் அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும்" என்று ராயல் சேலன்ஞர்ஸ் அணியின் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீமன்றம் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதோடு தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.