மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
தெலுங்கு சினிமாவின் கடவுளாக கொண்டாடப்படுகிறவர் என்.டி.ராமராவ். மூன்று முறை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திர மக்களின் மனதில் கிருஷ்ண பரமாத்மாவாக பார்க்கப்படுகிறவர். அவரது நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக என்.டி.ராமராவ் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் சிறப்பு நாணயத்தை, தலைநகர் புதுடில்லியில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் என்டிஆரின் மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் என்டிஆரின் மருமகனுமாக சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார். என்டிஆரின் பேரனும், பிரபல ஹீரோவுமான ஜூனியர் என்டிஆர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.