பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு சினிமாவின் கடவுளாக கொண்டாடப்படுகிறவர் என்.டி.ராமராவ். மூன்று முறை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திர மக்களின் மனதில் கிருஷ்ண பரமாத்மாவாக பார்க்கப்படுகிறவர். அவரது நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக என்.டி.ராமராவ் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் சிறப்பு நாணயத்தை, தலைநகர் புதுடில்லியில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் என்டிஆரின் மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் என்டிஆரின் மருமகனுமாக சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார். என்டிஆரின் பேரனும், பிரபல ஹீரோவுமான ஜூனியர் என்டிஆர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.