'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் |
'ஜெய் பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அடுத்து ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது.
'ஜெயிலர், லால்சலாம்' படங்களில் ரஜினி நடித்து முடித்த பிறகு இந்தப் படம் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அந்த இரண்டு படங்களையும் முடித்த பின் ரஜினிகாந்த் மாலத் தீவிற்கும், இமயமலைக்கும் ஓய்வெடுக்கச் சென்றார்.
இன்று காலை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படத்திற்கான பூஜை நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். விரைவில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.