ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

'அப்டேட்' கேட்பதே அஜித் ரசிகர்களுக்குப் பெரும் வேலையாகப் போய்விட்டது. 'விடாமுயற்சி' படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆன பின்னும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது.
அஜித்தும் பைக்கில் உலக டூர் என அடிக்கடி கிளம்பிவிடுவதால் படம் எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு நேற்று நடைபெற்ற 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என நேற்று பேசும் போது அவர் தெரிவித்துள்ளார். 'விடாமுயற்சி' படம் தங்களுக்கு முக்கியமான படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கதைத் திருட்டு சிக்கல் என பட வெளியீட்டின் போது எதுவும் வந்துவிடாமல் இருக்க சில வெளிநாட்டுத் திரைப்படங்களின் உரிமையை வாங்கியுள்ளதாகவும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.