படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
'அப்டேட்' கேட்பதே அஜித் ரசிகர்களுக்குப் பெரும் வேலையாகப் போய்விட்டது. 'விடாமுயற்சி' படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆன பின்னும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது.
அஜித்தும் பைக்கில் உலக டூர் என அடிக்கடி கிளம்பிவிடுவதால் படம் எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு நேற்று நடைபெற்ற 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என நேற்று பேசும் போது அவர் தெரிவித்துள்ளார். 'விடாமுயற்சி' படம் தங்களுக்கு முக்கியமான படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கதைத் திருட்டு சிக்கல் என பட வெளியீட்டின் போது எதுவும் வந்துவிடாமல் இருக்க சில வெளிநாட்டுத் திரைப்படங்களின் உரிமையை வாங்கியுள்ளதாகவும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.