மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மறைந்த நடிகர் நல்லாண்டி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து 2021ல் வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் ‛கடைசி விவசாயி'. இந்த படத்திற்கு தேசிய விருதும், அதில் நடித்த நல்லாண்டிக்கு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் மணிகண்டன்.
அவர் வெளியிட்ட நன்றி கடிதம் : மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டிக்கும், இப்படத்தினை உருவாக்க மிகப்பெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த விஜய் சேதுபதி மற்றும் சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றி.
தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் , சிறந்த தமிழ் திரைப்படமாக "கடைசி விவசாயி" தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு இந்தப் படம் மூலம் விருது கிடைத்துள்ளதால் தமிழ் திரைப்படத்துறைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் உயிரான விவசாயத்தை மையமாக வைத்து திரைப்படத்தை எடுத்து, மக்களை பெருமைப்படுத்தியதற்கும், தமிழ் திரைப்படத்தினை தேசிய அளவில் கொண்டு சென்ற அந்த திரைப்பட குழுவினருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.