சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் |
ராஞ்சி : ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இமயமலை சென்றார். பெங்களூருவில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய அவர், முதலில் ரிஷிகேஷ், பத்ரிநாத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இமயமலை ஒட்டியள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்ற அவர், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு நேற்று(ஆக.,16) ரஜினி சென்றார். ராஜ்பவனில், அம்மாநில கவர்னரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்த , எனது அன்பு நண்பரும், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த மனிதருமான ரஜினிகாந்தை ராஜ் பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஜார்க்கண்டின் மாபெரும் மண்ணிற்கு வந்த அவரை வரவேற்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.