2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! |
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ' தனி ஒருவன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த பிறகு ஜெயம் ரவி, மோகன் ராஜா சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக இதில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே மோகன் ராஜா அறிவித்தார். இதிலும் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்க போகிறார். கடந்த சில வருடங்களாக தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகவுள்ளது என கூறப்பட்டு வந்தாலும் ஏதோ சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என்கிறார்கள் . ஏனெனில், ஆகஸ்ட் 28ம் தேதியில் தான் கடந்த 2015ம் ஆண்டில் இப்படம் வெளிவந்தது. இப்போது அதே தேதியில் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.