பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ' தனி ஒருவன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த பிறகு ஜெயம் ரவி, மோகன் ராஜா சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக இதில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே மோகன் ராஜா அறிவித்தார். இதிலும் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்க போகிறார். கடந்த சில வருடங்களாக தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகவுள்ளது என கூறப்பட்டு வந்தாலும் ஏதோ சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என்கிறார்கள் . ஏனெனில், ஆகஸ்ட் 28ம் தேதியில் தான் கடந்த 2015ம் ஆண்டில் இப்படம் வெளிவந்தது. இப்போது அதே தேதியில் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.