என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! |
கன்னட திரையுலகில் இயக்குனர், நடிகர் என இரு முகங்கள் கொண்டவர் உபேந்திரா. அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த சத்யம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் பெரிய வரவேற்பை பெறத் தவறியது. இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தான் நடத்தி வரும் கட்சியின் வருடாந்திர நிறைவு விழாவை முன்னிட்டு சோஷியல் மீடியாவில் லைவ் வீடியோவில் பேசும்போது தலித்துகள் பற்றி மரியாதை குறைவான வார்த்தைகளை போகிற போக்கில் பேசி விட்டார் உபேந்திரா.
உபேந்திரா பேசும்போது விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசியவர், ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கே தலித்துகள் இருக்கத்தான் செய்வார்கள் என்கிற வார்த்தைகளை பிரயோகித்தார்.
இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சர்ச்சையையும் கிளப்பியது. இதைத்தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டு எப்ஐஆரும் போடப்பட்டுள்ளது. நிலைமை சீரியஸ் ஆவதை உணர்ந்த உபேந்திரா அந்த வீடியோவை உடனே அழித்துவிட்டார். மேலும் தான் எந்தவித உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை என்றும், பழமொழி சொல்வார்களே அதே போன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தபோது அப்படி பேசி விட்டேன் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.