7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் 'டப்பாங்குத்து' என்ற படத்தை தயாரிக்கிறது. ஆர்.முத்து வீரா இயக்குகிறார், ராஜா பக்தவச்சலம் ஒளிப்பதிவு செய்கிறார், சரவணன் இசை அமைக்கிறார். தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா மற்றும் ஆண்ட்ரூஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஆர்.முத்து வீரா கூறியதாவது: மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் நிகழ்ச்சி நடத்துவார்கள். அதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம். அதேபோல் மற்றொரு தெருக்கூத்து கலையை மையமாக வைத்து உருவாகி வருவதே டப்பாங்குத்து. திருவிழா நாட்களில் தெருக்கூத்து ஆட்டம் போடுவார்கள். அதில் ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என வித விதமாக ஆடி பாடி விடியும்வரை ரசிக்க வைப்பார்கள். அந்த கலையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டதே டப்பாங்குத்து திரைப்படம்.
டப்பாங்குத்தில் 15 வகையான நாட்டுப்புற பாடலுக்கு சரவணன் இசையமைத்துள்ளார். 'கர்ணன்' படத்தில் கிடக்குழி மாரியம்மா பாடிய “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் ராம்ஜி கேசட்டில் இடம் பெற்ற பாடல். அதே போல் டப்பாங்குத்து திரைப்படத்தில் ராம்ஜி கேசட்டின் உரிமை பெற்று 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. என்றார்.