'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தவிர அரசியல், தொழில் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.
சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்பளித்த நீதிமன்றம், ஜெயப்பிரதா மற்றும் அவரது பங்குதாரர்கள் இருவர் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொழிலாளர்களிடம் வசூலித்த தொகையை தந்து விடுவதாக ஜெயப்பிரதா தரப்பு கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்வார் என்று தெரிகிறது.




