மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தவிர அரசியல், தொழில் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.
சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்பளித்த நீதிமன்றம், ஜெயப்பிரதா மற்றும் அவரது பங்குதாரர்கள் இருவர் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொழிலாளர்களிடம் வசூலித்த தொகையை தந்து விடுவதாக ஜெயப்பிரதா தரப்பு கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்வார் என்று தெரிகிறது.