எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ்குமார், 'ஜெயிலர்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். படத்தில் ரஜினிக்கு உதவி செய்யும் 'நரசிம்மா' என்ற ஒரு தாதா கதாபாத்திரத்தில் சிறிது நேரமே படத்தில் வருகிறார். இருந்தாலும் அவரது காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அவரது காட்சிகளுக்கு நல்ல ஆரவாரம் கிடைத்துள்ளது. அதற்காக வீடியோ மூலம் கன்னடத்திலும், தமிழிலும் நன்றி தெரிவித்துள்ளார்.
'ஜெயிலர்' படம் இப்ப எல்லா இடத்துலயும் நல்ல கலெக்ஷனோட ஓடிட்டிருக்கு, நல்ல ரிப்போர்ட்ஸ் வந்திருக்கு. நான் மோகன்லால் சார், ஜாக்கி ஷெராப், தமன்னா எல்லாரும் கேமியோ ரோல் பண்ணியிருக்கோம். இந்த அன்பைக் கொடுத்ததுக்காக நேரடியாக ஒரு நன்றி சொல்லணும். நெல்சன் குறிப்பாக ரஜினி சாருக்கு... அவர் கூட நடிக்கணும்னு எவ்வளவோ பேர் காத்துட்டிருக்காங்க. எனக்கு அந்த வாய்ப்பு வந்தது மகிழ்ச்சி, குஷி. நீங்க கொடுத்த அன்பை எப்போதும் என் இதயத்துல வச்சிருப்பேன், நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் சிவராஜ்குமார்.