நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சார்லி சாப்ளின் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். தொடர்ந்து விசில், பரசுராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் பா.ஜ. கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், அந்தக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் விலகினார். தற்போது எந்த கட்சியிலும் இல்லாமல் உள்ளார்.
இந்நிலையில் திருப்பதி சென்ற காயத்ரி ரகுராம், ஏழுமலையானுக்காக வேண்டி மொட்டை போட்டுள்ளார். மொட்டை எடுத்த பின் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து, ‛‛10 ஆண்டு வேண்டுதல். திருப்பதியில் நிறைவேற்றிவிட்டேன். ஓம் நமோ நாராயணா'' என குறிப்பிட்டு, கமலின் தசாவதாரம் படத்தில் வரும் ‛‛ஓம் நமோ நாராயணா'' என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார்.