கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சார்லி சாப்ளின் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். தொடர்ந்து விசில், பரசுராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் பா.ஜ. கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், அந்தக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் விலகினார். தற்போது எந்த கட்சியிலும் இல்லாமல் உள்ளார்.
இந்நிலையில் திருப்பதி சென்ற காயத்ரி ரகுராம், ஏழுமலையானுக்காக வேண்டி மொட்டை போட்டுள்ளார். மொட்டை எடுத்த பின் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து, ‛‛10 ஆண்டு வேண்டுதல். திருப்பதியில் நிறைவேற்றிவிட்டேன். ஓம் நமோ நாராயணா'' என குறிப்பிட்டு, கமலின் தசாவதாரம் படத்தில் வரும் ‛‛ஓம் நமோ நாராயணா'' என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார்.