புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வந்த குஷி படத்தை முடித்துள்ள சமந்தா, தற்போது தனது தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள தசை அழற்சி நோய் சிகிச்சைக்காக ஒரு பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் அவர் 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதற்கு தனது சமூக வலைதளத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சமந்தா.
அவர் கூறுகையில், மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக ஒரு நடிகரிடத்தில் நான் 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பதோடு எனக்கென்று தொழில் இருப்பதால் எனது தேவைகளை என்னால் கவனித்துக் கொள்ள முடியும். என்னைப் போலவே இந்த நோயினால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு இந்த நோய் சிகிச்சைக்கு இவ்வளவு பெரிய தொகை எல்லாம் தேவைப்படாது என்றும் ஒரு விளக்கம் கொடுத்து, தன்னைப்பற்றி பரவி வந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தா.