நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வந்த குஷி படத்தை முடித்துள்ள சமந்தா, தற்போது தனது தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள தசை அழற்சி நோய் சிகிச்சைக்காக ஒரு பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் அவர் 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதற்கு தனது சமூக வலைதளத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சமந்தா.
அவர் கூறுகையில், மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக ஒரு நடிகரிடத்தில் நான் 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பதோடு எனக்கென்று தொழில் இருப்பதால் எனது தேவைகளை என்னால் கவனித்துக் கொள்ள முடியும். என்னைப் போலவே இந்த நோயினால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு இந்த நோய் சிகிச்சைக்கு இவ்வளவு பெரிய தொகை எல்லாம் தேவைப்படாது என்றும் ஒரு விளக்கம் கொடுத்து, தன்னைப்பற்றி பரவி வந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தா.