‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள நடிகர் பிரித்விராஜ் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கதாநாயகனாக நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ் அதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலும் தானும் இணைந்து நடித்த ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அதேசமயம் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிஸியான வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பிரித்விராஜிடம் தனக்காக ஒரு படம் இயக்க முடியுமா, கதை இருக்கிறதா என பிரபாஸ் கேட்டபோது அசத்தலான கதை ஒன்றை கூறி பிரபாஸை ஆச்சரியப்படுத்தினாராம் பிரித்விராஜ். அடுத்ததாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளார் பிரித்விராஜ். அந்த வகையில் பிரித்விராஜ் மற்றும் பிரபாஸ் தங்களது அடுத்தடுத்த படங்களை முடித்துவிட்டு புதிய படத்திற்காக இணைய வாய்ப்பு உண்டு என்று தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.




