பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக வலம் வருகிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர் கையில் வைரம் வடிவலான மோதிரம் போன்று அணிந்த போட்டோ ஒன்று வைரலானது. அது வைரம் என்றும், உலகின் 5வது பெரிய வைரம் என்றும், இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் செய்தி பரவியது. மேலும் சிரஞ்சீவி உடன் 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் தமன்னா நடித்தபோது அவரின் நடிப்பை பாராட்டி, ராம் சரண் மனைவி உபாசானா அவருக்கு இதை பரிசளித்ததாகவும் தகவல் வெளியானது.
இதை மறுத்துள்ள தமன்னா, ‛‛இது நீங்கள் நினைப்பது போன்று வைரம் அல்ல, வெறும் பாட்டில் ஓபனர் தான்'' என தெளிவுப்படுத்தி உள்ளார்.
முன்னதாக இதே போட்டோ சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வைரலான போது அப்போதும் இதேப்போன்று ஒரு விளக்கத்தை தமன்னா அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.