2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி சார்பில் வாராஹி என்ற யாத்திரையை தொடங்கினார். அப்போது அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் ஆந்திரா அமைச்சரும், நடிகையுமான ரோஜா, நடிகர் பவன் கல்யாணை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
அவர் கூறுகையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பவன் கல்யாண் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி அவர் கற்றுக் கொடுத்தால் அது சன்னி லியோன் வேதம் ஓதியது போல் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். அமைச்சர் ரோஜாவின் இந்த கருத்துக்கு பவர் கல்யாண் ரசிகர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் சன்னி லியோனும் ரோஜாவுக்கு சோசியல் மீடியாவில் ஒரு பதிலடி கொடுத்து அதை அவருக்கு டேக் செய்திருக்கிறார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒரு ஆபாச பட நடிகை தான். ஆனபோதிலும் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைப் போல் அல்லாமல் நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாசமாக நடிப்பதை விட்டு வெளியேறி விட்டேன். ஆனால் நீங்கள் அந்த உலகத்திற்குள் தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள்'' என்று ரோஜாவுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் சன்னி லியோன். அவரது இந்த கருத்து ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.