பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஈஷா ரெப்பா. 'லைப் இஸ் பியூட்டிபுல்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஈஷா தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமானார். நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சுதிர் பாபு ஜோடியாக 'மாயா மச்சின்திர' படத்திலும் ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக 'தயா' படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு பேசத் தெரிந்த தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் மற்ற மொழி நடிகைகளுக்கே தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தரப்படுகிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தமிழ், மலையாள படங்களில் நடித்தபோது அங்குள்ளவர்கள் தெலுங்கு பட திரையுலகை பற்றி சிலாகித்து பேசுவதை கேட்டு இருக்கிறேன். ஆனால் தெலுங்கு பட உலகில் தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுக்கிறார்கள். மற்ற மொழி கதாநாயகிகளை வைத்துத்தான் படங்கள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாரும் கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது வேற்றுமொழி நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏன் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கு மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகிலும் மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். என்றார்.