நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நடிகர் தனுஷ் ‛கேப்டன் மில்லர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்தனர். சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்ட அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷின் அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஒரு பேட்டியில் தனுஷ் 50வது படத்தில் ஒரு நல்ல ரோல் உள்ளது. அதில் நான் தான் நடிப்பேன் என்று தனுஷிடம் கேட்டுள்ளதாக செல்வராகவன் கூறியிருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.