புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகை திரிஷா திரையுலகில் நுழைந்து இந்த 20 வருடங்களில் தற்போதும் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். அடுத்தடுத்து வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் மூலமாகவும் திரிஷா இன்னும் அசைக்க முடியாத நடிகையாக மாறியுள்ளார். இன்னொரு பக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்திலும் 'ஹே ஜூட்' என்கிற படத்தில் கதாநாயகியாக நுழைந்த திரிஷா, அதைத்தொடர்ந்து ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவாகும் ராம் என்கிற படத்தில் நடிக்கிறார், மூன்று வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படம் இன்னும் முடிவடையாத நிலையில் இருக்கிறது,
இதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பாரன்சிக் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.. இந்த படத்தை அகில் பால் மற்றும் அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவர்கள் மீண்டும் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐடென்டி என்கிற படத்தை இயக்க உள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனராம். அனேகமாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னொரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.