பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவில் முக்கியமான தடத்தைப் பதித்த 'சுப்பிரமணியபுரம்' படம் வெளிவந்து இன்றுடன்(ஜூலை 4) 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. சசிகுமார் இயக்கம் நடிப்பில், அவருடன் சுவாதி, ஜெய், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு ஜுலை 4ம் தேதி வெளிவந்த படம். 80களில் நடப்பதாகக் கதை கொண்ட இந்தப் படம் அந்த நாட்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுக்களைப் பெற்றனர். நட்பின் நம்பிக்கைத் துரோகத்தை ரத்தமும், சதையுமாய் காட்டிய படம்.
இன்று படத்தின் 15வது வருட நிறைவை முன்னிட்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய் உள்ளிட்ட பலரும் அவர்களது நினைவுகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துள்ளனர்.
“நேற்று போல் இருக்கிறது, 'சுப்பிரமணியபுரம்' 15 ஆண்டுகள்… நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளது. இப்படத்தை நீங்கள் அங்கீகரிக்க மட்டும் செய்யவில்லை, கொண்டாடினீர்கள். இந்த குறிப்பிடத்தக்க நாளில், உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனது இயக்கத்தில் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறேன்,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படத்திற்குப் பிறகு 2010ல் 'ஈசன்' என்ற படத்தை இயக்கினார் சசிகுமார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு கடந்த 13 வருடங்களாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இயக்கம் பற்றி தெரிவித்துள்ளார்.