'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி |
90களில் ஆக்சன் ஹீரோவாக, முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். கால மாற்றத்தில் கதாநாயகன் அந்தஸ்திலிருந்து மாறினாலும் தற்போது நடித்து வரும் படங்களில் நாயகனுக்கு இணையான அல்லது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக, வாரிசு படத்தில் விஜய்யின் தந்தையாக, கஸ்டடி படத்தில் நெகட்டிவ் போலீஸ் அதிகாரியாக, சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற போர் தொழில் திரைப்படத்தில் இறுக்கமான போலீஸ் அதிகாரியாக என விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் சரத்குமார்.
குறிப்பாக இப்போது அவர் நடித்து வரும் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக தான் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ஸ்மைல் மேன் என்கிற படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக தான் நடித்துள்ளார். அதேசமயம் அந்த படத்தில் கஜினி பட சூர்யா போல சட்டென்று ஒரு ஞாபக மறதிக்கு ஆளாகும் மனிதராக நடித்துள்ளாராம் சரத்குமார். குற்றவாளியை நெருங்கி பிடித்து விடுவாரோ என்று நினைக்கின்ற நேரத்தில், தான் எதற்காக அங்கே வந்தோம் என்பதே மறந்துபோய் வில்லனிடமே சென்று மன்னிப்பு கேட்டு கண்டு கொள்ளாமல் செல்வது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் தான் தொடர்ந்து தன்னை தேடி வருகின்றன என்றாலும் அவை கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தால் ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் சரத்குமார்.