மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் |
தனது தனது பிரம்மாண்ட படைப்புகளால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை திரையுலகினரையும் சரி ரசிகர்களையும் சரி பிரமிக்க வைக்கும் விதமாக படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்று பெருமை சேர்த்தது.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்று திரும்பும் வரை பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார் ராஜமவுலி. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்த இடமான தூத்துக்குடிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்து சென்றுள்ளார் ராஜமவுலி. அவரது மனைவி ரமா, மகன் கார்த்திகேயா, மருமகள் பூஜா, மகள் மயூரா உள்ளிட்டோருடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சில நாட்கள் தங்கி இந்த சுற்றுலாவை அனுபவித்துள்ளார் ராஜமவுலி.
அங்கே தங்கி இருந்தபோது இந்த ரிசார்ட்டில் தான் வந்து சென்றதன் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்துள்ளார் ராஜமவுலி. அங்கே தங்கி இருந்தபோது அவர்களை உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தத்த அனைனா மேத்யூ என்கிற பெண் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு, “ராஜமவுலி சாரின் குடும்பத்திற்கு விருந்தோம்பல் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.