மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சேலம் அருகே ஏத்தாப்பூரில் உள்ள, 146 அடி உயர முருகன் சுவாமியை, நடிகர் யோகிபாபு தரிசித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. அங்கு யோகிபாபு, அவரது குடும்பத்தினருடன் வந்தார். அவர், மனைவி மஞ்சுபார்கவி, 2 வயது மகன் விசாகன், 7 மாத பெண் குழந்தை பரணிகார்த்திகா ஆகியோர், மூலவர் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து கோவிலை சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, 146 அடி உயர முருகன் சிலை அருகே உள்ள வேல் சிலைக்கு, நடிகர் யோகிபாபு குடும்பத்தினருடன், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். கோவிலுக்கு வந்த பக்தர்களுடன், யோகிபாபு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.