‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சிவாஜிகணேசன், கமல்ஹாசன், கவுதமி, ரேவதி, நாசர், வடிவேலு நடித்து வெளிவந்த “தேவர் மகன்” படம் குறித்த தனது கருத்தை 'மாமன்னன்' பட இசை வெளியீட்டின் போது பேசியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். அப்போது அவர் பேசியது குறித்து தற்போது கமல்ஹாசன் ரசிகர்கள் திடீரென மாரி செல்வராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மற்றுமொரு பேச்சின் போது அவர் கமல்ஹாசன், கவுதமி நடித்து வெளிவந்த 'பாபநாசம்' படம் பற்றியும் பேசியிருந்தார். கமல்ஹாசனின் இரண்டு படங்கள் பற்றி மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியதைக் குறித்து பல கமல்ஹாசன் ரசிகர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். இரண்டு படங்களைப் பற்றிய புரிதலும் அவருக்கில்லை என்றும், மாரி செல்வராஜ் கூட அவரது படங்களில் குறிப்பிட்ட சாதியைப் பற்றித்தான் மையப்படுத்தி படமெடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
'தேவர் மகன்' படத்தில் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரமான 'இசக்கி' கதாபாத்திரம்தான் 'மாமன்னன்' படம் உருவாகக் காரணம் என்றும் மாரி செல்வராஜ் பேசியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள 'மாமன்னன்' படம் அடுத்த வாரம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளிவந்த பின் அப்படத்தைப் பற்றி கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளது.