பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
சிவாஜிகணேசன், கமல்ஹாசன், கவுதமி, ரேவதி, நாசர், வடிவேலு நடித்து வெளிவந்த “தேவர் மகன்” படம் குறித்த தனது கருத்தை 'மாமன்னன்' பட இசை வெளியீட்டின் போது பேசியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். அப்போது அவர் பேசியது குறித்து தற்போது கமல்ஹாசன் ரசிகர்கள் திடீரென மாரி செல்வராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மற்றுமொரு பேச்சின் போது அவர் கமல்ஹாசன், கவுதமி நடித்து வெளிவந்த 'பாபநாசம்' படம் பற்றியும் பேசியிருந்தார். கமல்ஹாசனின் இரண்டு படங்கள் பற்றி மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியதைக் குறித்து பல கமல்ஹாசன் ரசிகர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். இரண்டு படங்களைப் பற்றிய புரிதலும் அவருக்கில்லை என்றும், மாரி செல்வராஜ் கூட அவரது படங்களில் குறிப்பிட்ட சாதியைப் பற்றித்தான் மையப்படுத்தி படமெடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
'தேவர் மகன்' படத்தில் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரமான 'இசக்கி' கதாபாத்திரம்தான் 'மாமன்னன்' படம் உருவாகக் காரணம் என்றும் மாரி செல்வராஜ் பேசியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள 'மாமன்னன்' படம் அடுத்த வாரம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளிவந்த பின் அப்படத்தைப் பற்றி கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளது.