''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
ஜுன் மாதத்தில் பள்ளிகள் திறந்த சமயத்தில் அதிகப் படங்கள் வெளிவராது. பள்ளி, கல்லூரி சம்பந்தமான வேலைகளில் பெற்றோர்கள் மிகவும் பிஸியாக இருப்பார்கள். அதனால் தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜுன் மாதத்திலும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த வாரம் ஜுன் 23ம் தேதி, “அழகிய கண்ணே, அஸ்வின்ஸ், நாயாட்டி, ரெஜினா, தண்டட்டி, பாயும் ஒளி நீ எனக்கு,” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு கமல்ஹாசன் நடித்த பழைய படமான 'வேட்டையாடு விளையாடு' படமும் ரீ-ரிலீசாகிறது. இப்படம் தவிர மற்ற படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். கடந்த வாரம் வெளியான படங்களுக்கே வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்த வாரம் அவற்றிற்குத் தகுந்த அளவில் தியேட்டர்கள் கிடைத்து அவை வெளிவந்து ரசிகர்களை எப்படி கவரப் போகிறது என்பது சவால்தான்.
தயாரிப்பாளர் சங்கம் இரு தினங்களுக்கு முன்பு நடத்திய பொதுக்குழுவில் பல தீர்மானங்களை நிறைவேற்றியது. அது போல ஒவ்வொரு வாரமும் இப்படி அதிகப் படங்கள் வருவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சிறிய தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பல படங்களுக்கு தமிழகம் முழுவதுமே 50 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.