மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |
அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் 'போர் தொழில்'. ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் என விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டைப் பெற்ற படம். பல சினிமா பிரபலங்களும் படம் வெளிவந்த போது பாராட்டினார்கள்.
ஆனால், படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்த சரத்குமார் மனைவி ராதிகா இரண்டு வாரங்களுக்குப் பிறகு படத்தைப் பாராட்டி டுவீட் செய்துள்ளார். “நல்ல சினிமா… பத்திரிகையாளர்களின் சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாய் வழியாக இந்தப் படம் மேஜிக் பெற்றது. சினிமாவில் ஒவ்வொரு நாளும் ஒன்றைக் கற்கிறோம், இது வழக்கத்திற்கு மாறானது, மேலும் நட்சத்திரங்களுக்கு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கன்டென்ட் தான் கிங் என்பதை 'போர் தொழில்' நிரூபித்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவாவது இரண்டு வாரங்களுக்குள் பாராட்டிவிட்டார். சில சினிமா பிரபலங்கள் நல்ல படம் என்று பெயரெடுத்த படங்களைக் கூட ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துவிட்டு பாராட்டும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.