ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் 'போர் தொழில்'. ஒரு பரபரப்பான த்ரில்லர் படம் என விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டைப் பெற்ற படம். பல சினிமா பிரபலங்களும் படம் வெளிவந்த போது பாராட்டினார்கள்.
ஆனால், படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்த சரத்குமார் மனைவி ராதிகா இரண்டு வாரங்களுக்குப் பிறகு படத்தைப் பாராட்டி டுவீட் செய்துள்ளார். “நல்ல சினிமா… பத்திரிகையாளர்களின் சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாய் வழியாக இந்தப் படம் மேஜிக் பெற்றது. சினிமாவில் ஒவ்வொரு நாளும் ஒன்றைக் கற்கிறோம், இது வழக்கத்திற்கு மாறானது, மேலும் நட்சத்திரங்களுக்கு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கன்டென்ட் தான் கிங் என்பதை 'போர் தொழில்' நிரூபித்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவாவது இரண்டு வாரங்களுக்குள் பாராட்டிவிட்டார். சில சினிமா பிரபலங்கள் நல்ல படம் என்று பெயரெடுத்த படங்களைக் கூட ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துவிட்டு பாராட்டும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.