தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' |
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பின்னணியும் பாடி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கடந்த மாதம் கோலாலம்பூரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அடுத்தபடியாக ஜூலை ஒன்றாம் தேதி கோவையில் ஆண்ட்ரியா லைவ் இன் கோவை என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். அது குறித்த தகவலை அவர் கூறுகையில், முதல் முறையாக கோவையில் தனி இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறேன். வருகிற ஜூலை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது. இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாட உள்ளேன். அதோடு நான் பாடியதில் ஹூ இஸ் தி ஹீரோ, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்பட பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. மேலும், எந்த விஷயமும் எளிதில்லை. அனைத்திலுமே ஒருவித கஷ்டம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மியூசிக் படித்து வருகிறேன். அதுதான் இப்போது என்னை பாட வைக்கிறது. எனது இசை நிகழ்ச்சிக்கு கோவையில் நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, ஊ சொல்றியா மாமா என்ற பாடலையும் பாடி தனது பேட்டியை முடித்துக் கொண்டுள்ளார்.