மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பின்னணியும் பாடி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கடந்த மாதம் கோலாலம்பூரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அடுத்தபடியாக ஜூலை ஒன்றாம் தேதி கோவையில் ஆண்ட்ரியா லைவ் இன் கோவை என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். அது குறித்த தகவலை அவர் கூறுகையில், முதல் முறையாக கோவையில் தனி இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறேன். வருகிற ஜூலை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது. இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாட உள்ளேன். அதோடு நான் பாடியதில் ஹூ இஸ் தி ஹீரோ, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்பட பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. மேலும், எந்த விஷயமும் எளிதில்லை. அனைத்திலுமே ஒருவித கஷ்டம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மியூசிக் படித்து வருகிறேன். அதுதான் இப்போது என்னை பாட வைக்கிறது. எனது இசை நிகழ்ச்சிக்கு கோவையில் நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, ஊ சொல்றியா மாமா என்ற பாடலையும் பாடி தனது பேட்டியை முடித்துக் கொண்டுள்ளார்.