300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பின்னணியும் பாடி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கடந்த மாதம் கோலாலம்பூரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அடுத்தபடியாக ஜூலை ஒன்றாம் தேதி கோவையில் ஆண்ட்ரியா லைவ் இன் கோவை என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். அது குறித்த தகவலை அவர் கூறுகையில், முதல் முறையாக கோவையில் தனி இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறேன். வருகிற ஜூலை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது. இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாட உள்ளேன். அதோடு நான் பாடியதில் ஹூ இஸ் தி ஹீரோ, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்பட பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. மேலும், எந்த விஷயமும் எளிதில்லை. அனைத்திலுமே ஒருவித கஷ்டம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மியூசிக் படித்து வருகிறேன். அதுதான் இப்போது என்னை பாட வைக்கிறது. எனது இசை நிகழ்ச்சிக்கு கோவையில் நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, ஊ சொல்றியா மாமா என்ற பாடலையும் பாடி தனது பேட்டியை முடித்துக் கொண்டுள்ளார்.