போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
'வெண்ணிலா கபடி குழு'வில் தொடங்கி கபடி போட்டியை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்து விட்டது. அந்த வரிசையில் வருகிற 23ம் தேதி வெளியாகும் படம் 'கபடி ப்ரோ'. இதனை அஞ்சனா சினிமாஸ் சார்பில் உஷா சதீஷ் தயாரிக்கிறார், சதீஷ் ஜெயராமன் இயக்குகிறார். சுஜன், பிரியா லால், சிங்கம்புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதனராவ், ஹானா, மனோபாலா, சண்முக சுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜே.டேனியல் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சதீஷ் ஜெயராமன் கூறியதாவது: சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் கதை. அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும், சக்தியும் உள்ளனர். இவர்கள் மூவரும் 'பாயும் புலி' எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர். இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் மகள் அபிராமியும் காதல் கொள்கின்றனர். இதனால் இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். பின்பு நடந்தது என்ன ..? கபடி போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே கதை. என்றார்.