மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
டி.ராஜேந்தருக்கு வேலூரில் இரண்டு தியேட்டர்கள் உள்ளது. தற்போது வேலூரில் கால்நடை மருத்துமனை அருகே உள்ள ரயில்வே கேட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த மேம்பாலம் டி.ராஜேந்தரின் தியேட்டர் வழியாக செல்கிறது. இதற்காக அவர் நிலத்தில் இருந்து 527 சதுரமீட்டர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது. இதற்கான நோட்டீஸ் டி.ராஜேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று வேலூர் சென்ற டி.ராஜேந்தர் பத்திரபதிவு அலுவலத்திற்கு சென்று தனது 527 சதுர மீட்டர் நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக மேம்பாலம் கட்ட வழங்கினார். இதற்காக அரசு அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குகிறது.