கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாகுபலி, பாகுபலி- 2, ஆர்ஆர்ஆர் படங்களைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதியுள்ளார். கீரவாணி இசையமைக்கிறார். தென் ஆப்பிரிக்கா காடுகளில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஆக்ஷன் அட்வென்சர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஏராளமான மிருகங்களும் இடம் பெறுகின்றன. இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 2025ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. மகேஷ்பாபுவின் 29வது படமான இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.