இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
இயக்குனர் கவுதம் மேனன் சமீபகாலமாக ஒரு குணசித்திர நடிகராகவும் மாறி தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ், கடந்த வருடம் தெலுங்கில் வெளியான சீதாராமம், இந்த வருடம் தமிழில் வெளியான விடுதலை என ஒவ்வொரு மொழியிலும் முத்திரை பதிக்கும் நடிப்பை வழங்கி வருகிறார். அந்த வகையில் அவருக்கு தமிழில் மட்டுமல்ல மலையாளத்தில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆனால் சமீப காலமாக அவற்றை தவிர்த்து விட்டு ஏற்கனவே விக்ரமை வைத்து தான் இயக்கி வந்த நீண்ட நாட்களாக ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன்.
இந்த நிலையில் தான் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் பசூக்கா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுதம் மேனன். இதுகுறித்து அவர் கூறும்போது, துருவ நட்சத்திரம் பட வேலைகளையும் பிசியாக இருந்ததால், அதை முடித்துவிட்டு மற்ற படங்களில் ஒப்புக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால் மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் அதை மிஸ் பண்ண விரும்பாமல் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து அவருடன் நடித்தேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டதால் எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனால் மம்முட்டி தான் லைவ் சவுண்டில் எப்படி நடிக்க வேண்டும் என எனக்கு பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அந்த பத்து நாட்களும் மிகப்பெரிய கற்றல் அனுபவமாக எனக்கு இருந்தது” என்று கூறியுள்ளார்.