இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் 'தண்டட்டி'. அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 28ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பாளர் சதீஷ் குமார் இந்த படத்தை தடை செய்ய சொல்லி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு 'அண்டாவ காணோம்' படத்தைத் தயாரித்து அதற்கு தணிக்கையும் செய்திருக்கிறோம். அப்போது படத்தை வெளியிட முடியாமல் சில காரணங்களால் தடைபட்டு, இப்போது வெளியிட தயாராகி வருகிறோம். இந்த நிலையில், 'அண்டாவ காணோம்' படத்தின் கதையும், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள 'தண்டட்டி' படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'தண்டட்டி' திரைப்படத்தைப் பார்த்து என்னுடைய கதையோடு பொருந்திப் போயிருந்தால், 'தண்டட்டி' படத்தை வெளியிட தடை விதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.