அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? | ‛குட் பேட் அக்லி' : விமர்சனங்களை மீறி முதல் நாள் வசூல் | 'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! |
நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசன். சின்னத்திரை மூலம் நாடறிந்த அவர், பின்னர் சினிமாவில் பாடகர் ஆனார். 'சூதுகவ்வும்', 'காக்கி சட்டை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'குக்கூ', 'ரோமியோ ஜூலியட்', 'சிகரம் தொடு', 'ஜிகர்தண்டா', 'ஆம்பள', 'தானா சேர்ந்த கூட்டம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் உள்பட, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 378 பாடல்கள் பாடி உள்ளார்.'எம்.ஜி.ஆர் மகன்', 'அம்பு நாடு ஒம்பது குப்பம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சில படங்களில் பாடல் காட்சியிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ள அந்தோணிதாசன் தற்போது 'தல போச்சே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர 'இடி முழக்கம்', 'வைரி' ஆகிய படங்களிலும் நடிக்கிறார். 'ஆசை மச்சான்' என்ற இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட 'வந்தே மாதரம்' என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.