ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசன். சின்னத்திரை மூலம் நாடறிந்த அவர், பின்னர் சினிமாவில் பாடகர் ஆனார். 'சூதுகவ்வும்', 'காக்கி சட்டை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'குக்கூ', 'ரோமியோ ஜூலியட்', 'சிகரம் தொடு', 'ஜிகர்தண்டா', 'ஆம்பள', 'தானா சேர்ந்த கூட்டம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் உள்பட, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 378 பாடல்கள் பாடி உள்ளார்.'எம்.ஜி.ஆர் மகன்', 'அம்பு நாடு ஒம்பது குப்பம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சில படங்களில் பாடல் காட்சியிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ள அந்தோணிதாசன் தற்போது 'தல போச்சே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர 'இடி முழக்கம்', 'வைரி' ஆகிய படங்களிலும் நடிக்கிறார். 'ஆசை மச்சான்' என்ற இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட 'வந்தே மாதரம்' என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.