மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆகி இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் ஒரு போட்டோ சூட் நடத்தி மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள்.
அந்த போட்டோக்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரின் ஆதாரம் நீங்கள் தானே. கடந்த ஓராண்டு ஏற்ற இறக்கம், பின்னடைவுகள், சோதனைகள் இருந்தாலும் அதிகப்படியான அன்பும் பாசமும் கொண்ட குடும்பத்தை பார்க்க வீட்டிற்கு வருவது நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இருந்தது. அடைய விரும்பும் இலக்குகளை நோக்கி ஓடுவதற்கான அனைத்து ஆற்றலையும் குடும்பம் அளிக்கிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என் போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்'' என்று மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் பதிவிட்டு இருக்கிறார் .