லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கே.கே.,நகர் சென்னை, மதுரவாயல், தனலட்சுமி ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 29. இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா சைன்' ரக இருசக்கர வாகனத்தில், வடபழநி - ஆற்காடு சாலையில் சென்றார். செந்தில் ஏஜன்சி அருகே சென்ற போது, சாலிகிராமம், எம்.சி., அவென்யூவைச் சேர்ந்த சினிமா துணை நடிகர் பழனியப்பன், 41, தன் நண்பர் துரைராஜ் என்பவருடன், காரில் அதே பகுதியில் வந்துள்ளார்.
அப்போது, பழனியப்பன் குடி போதையில் ஓட்டி வந்த கார், சரண்ராஜின் இரு சக்கர வாகனத்தின் பின்னால், பயங்கரமாக மோதியுள்ளது. இதில் துாக்கி வீசப்பட்ட சரண்ராஜ், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலின்படி, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து, சரண்ராஜ் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனியப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.
சரண்ராஜூம் துணை நடிகராக உள்ளார். இவரும் பழனியப்பனும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. இது விபத்தா அல்லது கொலையா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.