புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
கே.கே.,நகர் சென்னை, மதுரவாயல், தனலட்சுமி ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 29. இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா சைன்' ரக இருசக்கர வாகனத்தில், வடபழநி - ஆற்காடு சாலையில் சென்றார். செந்தில் ஏஜன்சி அருகே சென்ற போது, சாலிகிராமம், எம்.சி., அவென்யூவைச் சேர்ந்த சினிமா துணை நடிகர் பழனியப்பன், 41, தன் நண்பர் துரைராஜ் என்பவருடன், காரில் அதே பகுதியில் வந்துள்ளார்.
அப்போது, பழனியப்பன் குடி போதையில் ஓட்டி வந்த கார், சரண்ராஜின் இரு சக்கர வாகனத்தின் பின்னால், பயங்கரமாக மோதியுள்ளது. இதில் துாக்கி வீசப்பட்ட சரண்ராஜ், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலின்படி, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து, சரண்ராஜ் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனியப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.
சரண்ராஜூம் துணை நடிகராக உள்ளார். இவரும் பழனியப்பனும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. இது விபத்தா அல்லது கொலையா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.