ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் |

நேரம், பிரேமம் போன்ற படங்களின் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்தபட தோல்விக்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் அடுத்து இயக்கும் தமிழ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். வித்தியாசமான காதல் கதைகளத்தில் இந்தப்படம் தயாராக உள்ளதாம்.