பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‛பூல் புலையா-2'. கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆவதாக தகவல் வெளியானது. அந்த தகவலின் படி, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாக சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார், அந்த பேட்டியில் அவர்கூறியது "இதன் ரீமேக் உரிமையை பெற்றுள்ளேன். இந்த படம் நல்ல கதை என்று நம்புகிறேன். யார் நடிக்கிறார்கள், இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்".
கடந்த சில வருடங்களாக தென்னிந்திய படங்களை தான் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹிந்திப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.